Home Ads

Monday 13 August 2018

இவ்வளவுதானா கூட்டம்!தமிழர்கள் மீது எனக்கு கோபம் வந்தது! - ரஜினி பேச்சு

கலைஞர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

அந்த நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த் "நான் கலைஞர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த காலை நேரத்தில் ராஜாஜி ஹாலுக்கு சென்றேன். அங்கு பார்த்தால் வெறும் 1000 பேர் தான் இருந்தனர். தமிழகத்தின் மிகப்பெரிய தலைவருக்கு இவ்வளவு தானா மரியாதை என நினைத்து தமிழர்கள் மீது எனக்கு கோபம் வந்தது."

"வீட்டிற்கு சென்று தூங்கிவிட்டு பின் மதியம் எழுந்து பார்த்தபோது அலை அலையாய் மக்கள் வந்ததை டிவியில் பார்த்தபோது தான் எனக்கு புரிந்தது 'தமிழர்கள் தமிழர்கள் தான்!' " என ரஜினிகாந்த கூறினார்.

No comments:

Post a Comment