Home Ads

Friday 5 October 2018

ஏக்கத்துடன் எழுதிய ஒரு பெண்: மனதை உலுக்கும் பதிவு..!

வளர்ந்து வரும் நாகரீக வளர்ச்சியில் இந்த இளைய தலைமுறையினரிடம் பெரிய பிரச்சனையாக இருப்பது குழந்தையின்மை.குழந்தையின்மை பிரச்சனைக்கு பலவிதமான் காரணங்கள் உள்ளன.பிரச்சனை ஆணின் புறமும் இருக்கலாம் பெண்ணின் புறமும் இருக்கலாம்.

ஆனால் இந்த பிரச்சனையில் பொதுவாக அதிகம் குற்றம் சாட்டப்படுவது பெண்களே.இதுபோன்ற குழந்தையின்மையால் கஷ்டப்படும் ஒரு பெண்ணின் கண்ணீர் வரவழைக்கும் வார்த்தைகள் !!

மாதத்தின் மூன்று நாட்களின் போது ஒரு சில நாட்கள் தள்ளிப்போனாலும் நீ தான் வந்திருக்கிறாயோ என சந்தோஷத்தில் பொங்குகிற

உன்னால் நிரம்பவேண்டும்

வா என் கண்மணியே!

உணவை சுமந்தது போதும்

உன்னை சுமக்க வேண்டும்

வா எங்கே இருக்கிறாய்!?

அம்மா என்று யார் அழைத்தாலும் உன் ஞாபகம் தான் வருகிறது!

நாற்பதை நெருங்க நெருங்க நாடி நரம்பெல்லாம் படபடக்கிறது!

உன்னை சுமக்க முடியாத என்னை ஏன் சுமந்தாய் என்று என் தாய்மீது கோபம் வருகிறது!

என் வலியை என் தாய்க்கு நான் தரவில்லை என்று சந்தோஷப்படுகிறேன்!

என் பிள்ளை தானே நீ,

நீயும் நீயில்லாத வலியை

உன் தாய்க்கு தந்துவிடாதே!

இதயத்தை இயங்கச்செய்யும் கடைசி கொஞ்ச ரத்தம் இருக்கமென்றாலும் அதில்கூட கருமுட்டை உருவாக்கித்தான் உனக்காக காத்திருப்பேன்!

எங்கே இருக்கிறாய்

வந்துவிடு என் செல்லமே!!

No comments:

Post a Comment