Home Ads

Saturday 11 August 2018

சீத்தாபழ இலைகளுக்குள் ஒளிந்திருக்கும் அற்புதம்! நீரிழிவு நோயிக்கு எப்படி மருந்தாகும்?

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும், வாய்நாடி வாய்ப்பச் செயல். இந்த திருக்குறளின் அர்த்தமே ஒரு மனிதனின் அனைத்து நோய்களுக்கும் பெரும் தீர்வாக உள்ளது.

அதாவது, ஒரு மனிதன் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அதனை இன்னது என ஆராய்ந்து, அதை குணப்படுத்தும் வழி முறைகள் என்ன என்பதை அறிந்து, பின் உடலுக்கு ஏற்ற சிகிச்சையை தருவதே ஒரு நோய்க்கான நல்ல தீர்வாக இருக்க முடியும். இதைதான் பல ஆரய்ச்சியாளர்களும் இன்றளவும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இதை போன்ற ஆராய்ச்சிகளில் கண்டறிந்த ஒரு புதுமையான கண்டுபிடிப்பு, நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் சக்தி சீத்தாப்பழ இலைகளுக்கு இருப்பது என்பது...! இத்தனை நாள் நாம் சீத்தாப்பழங்களை மட்டுமே சாப்பிட்டு வந்தோம். ஆனால் அதன் இலைகள் கூட இத்தனை அற்புத மருத்துவ குணங்கள் கொண்டதாக இருக்கிறதா..? என்பது மிகவும் ஆச்சரியமான தகவலாக இருக்கிறது.

இந்த இலைகள் புற்றுநோய்க்கு ஒரு அருமையான தீர்வை தருகின்றது என்றால் மிகவும் வியப்பாகத்தான் இருக்கும். இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உடலில் உள்ள வெள்ளை ரத்த அணுக்களை அதிகரித்து புற்றுநோய் செல்களுடன் போராடும் சக்தியை தருகிறது.

எனவே சீத்தப்பழ இலைகள் ஒருவரின் உடலில் புற்றுநோய் செல்கள் உருவாவதை பெரிதும் தடுக்கிறது.

சீத்தாப்பழ இலைகள் உடலில் உள்ள சர்க்கரையை கரைத்து, சீரான அளவில் இதனை வைக்கும். நார்சத்துக்களை சரியாக செரிமானம் அடைய செய்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

இந்த இலைகளை நீரில் போட்டு 5 நிமிடம் கொதிக்க விட்டு அதன் பிறகு வடிகட்டி, தினமும் காலையில் குடிக்க வேண்டும். இவ்வாறு குடித்து வந்தால் சர்க்கரை நோயின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

No comments:

Post a Comment